LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி கட்டணம் வரை – ஆகஸ்ட் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
நாளையுடன் ஜூலை மாதம் முடிந்து திங்கள் முதல் ஆகஸ்ட்டில் அனைவரும் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில் அன்று முதல் நமது அத்தியாவசிய தேவைகளிலும் சில மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. அதில் சில அதிர்ச்சிகளும், பல ஆச்சரியங்களும் அடங்கி இருக்கும்.
முக்கிய மாற்றங்கள்:
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் 18 நாட்களுக்கு மூடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் இருந்து தெரியவந்துள்ளது. ஆனால் இது நகரத்திற்கு நகரம் சற்று மாறுபடும். மறுபுறம் பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதன் விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது.
Exams Daily Mobile App Download
பணம் செலுத்தும் முறையை சரிபார்க்க நேர்மறை ஊதிய முறை (PPS):
5,00,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் காசோலைகளுக்கு கட்டாய PPSஐ அறிமுகப்படுத்த பேங்க் ஆஃப் பரோடா முன்வந்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்கு முன் அங்கீகரிப்புக்கான முக்கிய தகவலை டிஜிட்டல் முறையில் சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகளில் இருந்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இது குறித்து வங்கி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை? கல்வித்துறை விளக்கம்!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னர் லட்சக்கணக்கில் மதிப்புள்ள காசோலைகளை பணமாக மாற்றுவதற்கு பிபிஎஸ் திட்டத்தை பயன்படுத்துவதை பற்றி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்தன.
எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம்:
இந்த மாதம் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் அறிவிக்கப்பட்டாலும், ரூ.853 என்பது 7 ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்க உள்ளன. அதன்படி விலைகள் சற்று உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.