ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை? கல்வித்துறை விளக்கம்!
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு நிறைவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சிந்துவில் ஜூலை 31ம் தேதி வரையிலான விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோடை விடுமுறை:
உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொரோனா தாக்கம் காரணமாக கல்வித்துறையில் ஏகப்பட்ட இழப்புகள் ஏற்பட்டது. இதனை சரி செய்யும் நோக்கில் கல்வித்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒன்றாக ஆன்லைன் வழிக்கல்வி அசுர வளர்ச்சி அடைந்தது. இருப்பினும் இது மாணவர்களின் கற்றல் திறனில் தொய்வை ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் கருதினர். இதனால் விரைந்து பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மறுபுறம் அரசின் தீவிர நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு குறைந்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இம்முறை திட்டமிட்டபடி நடத்தப்பட்டது.
Post Office இல் கணக்கு துவங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – புதிய திட்டம் அறிமுகம்!
அதன் பின்னர் கோடை வெயிலின் தாக்கத்தால் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது சிந்துவில் பள்ளிகளுக்கு ஜூலை 31ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் மாகாண பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சிந்து முழுவதும் உள்ள பள்ளிகள் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கோடை விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்படுவது குறித்து அதிகாரபூர்வமற்ற செய்திகள், ஊகங்கள் பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் கல்வித்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஏற்கனவே அறிவித்தபடி ஜூலை 31ம் தேதியுடன் கோடை விடுமுறை முடிவுக்கு வருகிறது. இதனை மேலும் நீட்டிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.