அரசு ஊழியர்களுக்கு இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாட்டில் அரசு துறைகளில் வேலை பார்க்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடுத்த வாரம் முதல் விசேஷ விடுமுறை ஆனது வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது தீயாய் பரவி வருகிறது.
விசேஷ விடுமுறை
கொரோனா வைரஸ் பரவல் உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் மிகவும் அதிகஅளவில் அச்சுறுத்தியது. பொது மக்களை உடல்நல ரீதியில் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் மோசமடைய வைத்தது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில், தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது, இலங்கை. இலங்கை அரசு சுற்றுலா தலங்கள் மூலமாக தான் அதிக அளவில் பணத்தினை ஈடு செய்து வந்தது. ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் யாருமே வெளியிடங்களுக்கு செல்ல முடியாத சூழல் உண்டானது.
ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜூன் 30ம் தேதி வரை சிறப்பு முகாம் அறிவிப்பு!
அதன் எதிரொலியாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை சிகரத்தை தொட்டது என்று தான் கூற வேண்டும். இதனால் பொங்கிய பொது மக்கள் அரசிற்கு எதிராக பல வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர். நாட்டினை பார்த்து கொள்ள வேண்டிய ராஜா பக்ஷே நாட்டினை விட்டே தப்பித்து விட்டார். இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய அந்த நாட்டின் அமைச்சர் தினேஷ் குணவர்தன அரசு ஊழியர்களின் விசேஷ விடுமுறை குறித்து பேசியுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதன்படி, நாட்டில் அதிகப்படியான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டு வருகிறதாகவும், இதனால் அரசு துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வேலை பார்க்க வந்து போவது கூடுதல் செலவு ஆகும். அதனால், இதனை தவிர்க்கவும், எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக வெள்ளிக்கிழமை தோறும் விசேஷ விடுமுறை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.