தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் – பொங்கல் பரிசு! அதிகாரிகள் தகவல்!
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசான 11,500 இலவச வேட்டி, சேலைகள் முதல் கட்டமாக ஈரோடு மாவட்டம் பல்லடம் தாலுகா பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் பொங்கல் தொகுப்பு பரிசாக கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் ரேஷன் அட்டைதார்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம் எதிரொலி! மாணவர்கள் எதிர்பார்ப்பு!
அதன் கீழ் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. இப்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கான இலவச வேட்டி, சேலைகளும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (டிச.13) ஈரோடு மாவட்டம் பல்லடம் தாலுகா அலுவலகத்துக்கு இலவச வேட்டி, சேலைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிக்கு காதலா? ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் புகைப்படம்!
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்லடத்துக்கு முதல் கட்டமாக 11,500 இலவச வேட்டி, சேலைகள் வந்துள்ளது. படிப்படியாக அனைத்து வேட்டி, சேலைகள் வந்ததிற்கு பின்பு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் படி அவை ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த இலவச வேட்டி, சேலைகள், பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட 132 ரேஷன் கடைகளை சார்ந்த 77,374 அரிசி அட்டைதாரர்கள் மற்றும் 845 சர்க்கரை அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.