தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம் எதிரொலி! மாணவர்கள் எதிர்பார்ப்பு!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம் எதிரொலி! மாணவர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம் எதிரொலி! மாணவர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்? ஓமைக்ரான் அச்சம் எதிரொலி! மாணவர்கள் எதிர்பார்ப்பு!

தமிழகத்தில் ஓமைக்ரான் கொரோனா தொற்று அச்சம் அதிகரித்து உள்ள நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளனர்.

பள்ளிகள் மூடல்?

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தடுக்கும் நோக்கில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு ஆன்லைன் / கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாகவும், படிப்பின் மீது ஈடுபாடு குறைந்துள்ளதால் விரைந்து பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில் அரசின் துரித நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை ஆயிரமாக குறைந்தது. இதனால் அரசு சார்பில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிக்கு காதலா? ரசிகர்கள் ஷாக்! வைரலாகும் புகைப்படம்!

எனவே இயல்பு நிலை திரும்பியது. நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இடையில் கனமழை காரணமாக குறிப்பிட்ட நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் ஓமைக்ரான் எனப்படும் உருமாறிய கொரோனா தொற்று அச்சம் தலைதூக்க தொடங்கி உள்ளது. இதனால் சில மாநிலங்களில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் டிச.15ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை? ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் தீவிர ஆலோசனை!

கொரோனா 3வது அலை ஓமைக்ரான் தொற்றால் ஏற்படலாம் என கூறப்படுகிறது. எனவே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மூடி ஆன்லைன் / கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரி உள்ளனர். இதற்கிடையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!