தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் – இலவசமாக டேப்! அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!

0
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் - இலவசமாக டேப்! அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் - இலவசமாக டேப்! அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் – இலவசமாக டேப்! அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் கோவிலம்பாக்கம் ஊராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் 20-வது கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் , மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சூப்பர் அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் இன்று சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் 20-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் செய்தியர்களிடம் கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை கூறியுள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 90% (9,39,87,972 பேர்) பேருக்கு போடப்பட்டு உள்ளது.

பிப்ரவரி 1 முதல் 10-12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு!

முதல் தவணை தடுப்பூசி 5,20,29,899 பேர் (88.19%) செலுத்தி உள்ளனர். மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி 3,90,21,718 (67.41%) பேருக்கு செலுத்தி உள்ளனர் என அமைச்சர் கூறினார். இதுவரை 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு 25,91,788 (77.46%) பேர் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் இரண்டு தவணை தடுப்பூசியை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசியும் தமிழகத்தில் போடப்பட்டு வருகின்றன. பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 3,44,497 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.

பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 20 நாட்கள் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!

அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி வழங்கும் திட்டம் என பல சலுகைகளை பெற்று வருகின்றனர். இந்த வகையில் அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் 544 பேர் சேர்த்துள்ளனர். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த அடிப்படையில் மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்த்துள்ள 544 பேருக்கு டேப் (TAB) வழங்க திட்டம் இருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளதால், தேர்தலுக்கு பிறகு மாணவர்களுக்கு டேப் வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!