பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 20 நாட்கள் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
கொரோனா பெருந்தொற்று பரவல் உலகின் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம்:
கொரோனா பெருந் தொற்று பரவலை கட்டுப்படுத்த தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். அதனால் ஊழியர்களுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். அதன் காரணமாக ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கு விடுமுறை சலுகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.
IPL 2022 : முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாக தோனியின் CSK அணி – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க உள்ளதாக முடிவு செய்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று பரவலின் 2ம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய தொடங்கினர். அத்துடன் ஜனவரி 10ம் தேதி வரை வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஊழியர்களின் நலன் கருதி ஊழியர்களுக்கு ஊதிய விடுப்பு தினங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – கணக்கு தொடங்குவது எப்படி? முழு விபரம் இதோ!
இது வரை ஆண்டுக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போது 5 நாட்கள் அதிகரித்து 20 நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் புதிதாக குழந்தை பிறந்த பெற்றோர்கள் 18 வரை மட்டுமே விடுமுறை எடுக்க வேண்டும் என்பதை தற்போது 24 நாட்களாக உயர்த்தி வழங்கியுள்ளது. மேலும் சில சலுகைகளை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. அதனால் கூகுள் நிறுவன ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது .