பிப்ரவரி 1 முதல் 10-12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு!

0
பிப்ரவரி 1 முதல் 10-12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு!
பிப்ரவரி 1 முதல் 10-12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு!
பிப்ரவரி 1 முதல் 10-12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு!

ஹரியானா மாநிலத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் நிலைமை மேம்பட்டு வருவதால் திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்கள் ஆகியவற்றை 50% திறனுடன் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போல பள்ளிகள், கல்லூரிகள் பிப்ரவரி 1ம் தேதி திறக்கப்பட இருக்கிறது.

பள்ளிகள் திறப்பு

மாநிலம் முழுவதும் கொரோனா 3ம் அலை தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளிக்க முடிவு செய்துள்ள ஹரியானா அரசாங்கம், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் காம்ப்ளெக்ஸ்கள் ஆகியவற்றை 50 சதவீத இருக்கை திறனுடன் திறக்க அனுமதி அளித்திருக்கிறது. இது தொடர்பாக ஹரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, ‘மாநிலம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 20 நாட்கள் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!

மேலும் திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்கள் ஆகியவை 50 சதவீத இருக்கை வசதியுடன் இனி செயல்படலாம். கல்வி நிறுவனங்கள் தேவையான சமூக விலகல் விதிமுறைகள், வழக்கமான சுத்திகரிப்பு மற்றும் கொரோனா பொருத்தமான நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹரியானா மாநிலத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மூடப்பட்டுள்ள பள்ளிகளை முதற்கட்டமாக 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பிப்ரவரி 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கன்வர் பால் கடந்த ஜனவரி 25ம் தேதியன்று தெரிவித்திருந்தார்.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – கணக்கு தொடங்குவது எப்படி? முழு விபரம் இதோ!

இதற்கு முன்னதாக, சமீபத்தில் புதிய நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்திய ஹரியானா மாநில அரசு, பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது. இதனுடன் அனைத்து விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் மைதானங்கள் அனைத்தும் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!