ரேஷன் கார்டுதாரர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – இலவச மருத்துவ சிகிச்சை!
இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த்யோதயா கார்டு வைத்துள்ளவர்களுக்கும் இலவச சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இலவச சிகிச்சை:
இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி, பருப்பு, சீனி, மண்ணெண்ணெய், பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆரோக்கிய திட்டமாக விளங்கி வரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் ரூ. 5 லட்சம் வரைக்கும் சுகாதார காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் தரிசன டிக்கெட் முறைகேடு – போலீசார் அதிரடி நடவடிக்கை!
வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு அந்த்யோதயா ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டின் மூலமாக ஒவ்வொரு மாதமும் 35 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த்யோதயா அட்டைகள் வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஆயுஷ்மான் அட்டைகளை வழங்குவது தொடர்பான பிரச்சாரம் வரும் ஜூலை 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுஷ்மான் கார்டை பெற விரும்புபவர்கள் அந்த்யோதயா கார்டின் மூலமாகவே இ – சேவை மையங்களில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும், தகுதியான நபர்களுக்கு மட்டுமே ஆயுஷ்மான் பாரத் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் கார்டு மூலமாக பொது சேவை மையம், சமூக சுகாதார மையம், ஆயுஷ்மான் குழு அல்லது மாவட்ட மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையின் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு அந்தியோதயா கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே ஆயுஷ்மான் பாரத் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.