திருப்பதியில் தரிசன டிக்கெட் முறைகேடு – போலீசார் அதிரடி நடவடிக்கை!
திருப்பதியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலம் ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதே போல வி.ஐ.பி தரிசன டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் வந்ததை அடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிக்கெட் விநியோகம்:
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் வருகைக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இந்த நேரத்தில் தவறாது பூஜைகளும் பிற சடங்குகளும் கோயில் வளாக ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது பக்தர்கள் வருகை இன்றி திருப்பதி கோயில் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு நோய் தடுப்பு பணியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ஓரளவு பாதிப்புகள் குறைய தொடங்கியதும். நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நீர் நிலை, கால்வாய் ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க தடை – ஐகோர்ட் உத்தரவு!
தற்போது நேரடியாக இலவச தரிசன டிக்கெட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தினந்தோறும் 70,000 பக்தர்களுக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். அதனால் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக 3 முதல் 4 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முறைகேடாக டிக்கெட் பெற்று அதை பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இது குறித்து விசாரித்ததை அடுத்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் சிக்கியுள்ளார்.
மேலும் விஜிலென்ஸ் அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுனா முறைகேடாக 760 வி.ஐ.பி. தரிசன டிக்கெட் 350 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25 சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை பெற்று பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டது. அதனால் மல்லிகார்ஜுனா மற்றும் 2 பெண்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் திருமலை முதலாவது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.