ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சிலிண்டர், உணவு பொருட்கள் – அரசின் அசத்தல் திட்டங்கள்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சிலிண்டர், உணவு பொருட்கள் - அரசின் அசத்தல் திட்டங்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சிலிண்டர், உணவு பொருட்கள் - அரசின் அசத்தல் திட்டங்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சிலிண்டர், உணவு பொருட்கள் – அரசின் அசத்தல் திட்டங்கள்!

மாநிலத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இலவச சிலிண்டர்களை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் உணவு பொருட்களை 50% சதவீத மானியத்தில் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இலவச சிலிண்டர்:

இந்தியாவில் மாநில அரசுகள் ரேஷன் கார்டு திட்டம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஒரு வருடத்திற்கு 3 சிலிண்டர்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பாதி விலையில் உணவுப் பொருட்களை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் – வலுக்கும் கோரிக்கை!

அதாவது அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உப்பு, சர்க்கரை ஆகிய பொருட்களை 50% மானியத்துடன் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான அறிக்கை நடக்கவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மானிய விலை திட்டம் மூலம் 13.75 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டங்களுடன் சேர்த்து மத்திய அரசின் 5 கிலோ ரேஷன் பொருட்களும் வழங்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!