தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் – வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று அகவிலைப்படி உயர்வு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஈரோடு மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணாவிரத போராட்டம்:
தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளை மாட்டு சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். அதாவது, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தபடி சிபிஎஸ் சட்டத்தை ரத்து செய்யப்பட வேண்டும்.
சீருடைகளை தீர்மானிக்கும் உரிமை பள்ளிகளுக்கு உண்டு – கவர்னர் உரை!
முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பலன்களை தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், மத்திய அரசு ஊழியர்களைப் போலவே அதே விகிதத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், அரசாணை 115, 139, 152 ஆகியவற்றை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும், கிராம அலுவலக உதவியாளர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15,700 சம்பளமாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
மேலும், தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் எனவும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பாக 12 மாதங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் பணிபுரியும் சமையலர் உதவியாளர்களுக்கு தற்செயல் விடுப்பு எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதற்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.