நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மத்திய அரசு இலவச சிலிண்டர் எரிவாயு வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இலவச சிலிண்டர்:
பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக செயல்படுத்தி வந்த பி எம் உஜ்வாலா திட்டத்தில் 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் தற்போது பிரதான் மந்திரி உஜ்வாலா 2.0 திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூபாய் 8000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் வேலைவாய்ப்பு – 1933 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
இத்திட்டத்தின் கீழ் பயனடைய பயனாளிகள் www.pmuy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று உஜ்வாலா 2.0 திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெற வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள உங்களது விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து வழங்க வேண்டும். உங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும். இத்திட்டத்தில் பலனடைவதற்கு நீங்கள் இந்திய குடிமக்களாகவும், 18 வயதிற்கு மேற்பட்ட, இத்திட்டத்தின் மூலம் இதுவரை சமையல் எரிவாயு இணைப்பு பெறாதவராக இருக்க வேண்டும்.