திருப்பதி இலவச தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – 16 நிமிடத்தில் முன்பதிவு!

0
திருப்பதி இலவச தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - 16 நிமிடத்தில் முன்பதிவு!
திருப்பதி இலவச தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - 16 நிமிடத்தில் முன்பதிவு!
திருப்பதி இலவச தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – 16 நிமிடத்தில் முன்பதிவு!

கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் இலவச டிக்கெட்டுகளை நேரில் சென்று வாங்குவது தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதத்திற்கான இலவச டிக்கெட்டுகள் நேற்று ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது. சுமார் 3.10 லட்சம் இலவச டிக்கெட்டுகள் அனைத்தும் 16 நிமிடத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து முடித்தனர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இலவச டிக்கெட் முன்பதிவு

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இதில் குறிப்பாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதில் உலக புகழ்பெற்ற கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். தற்போது கொரோனா நோய் கட்டுக்குள் வந்ததால் தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சில விதிமுறைகளை தளர்த்தி பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது.

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம்!

இதில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியவர்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த மாதம் திறக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை நேரில் சென்று வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் நாள் ஒன்றிக்கு 12 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் கடந்த வாரம் கனமழை தொடர்ந்து அநேக இடங்களில் பெய்து கொண்டு வந்தது. குறிப்பாக திருப்பதி மலையில் தொடர்ந்து கனமழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கி இருந்தது.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – டிச.7ம் தேதி போராட்டம் அறிவிப்பு!

பல முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தின. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வெள்ள நீர் குறைந்ததால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நேற்று காலை அடுத்த மாதத்திற்கான இலவச தரிசனத்திற்கான முன்பதிவு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் தங்கும் அறைகளையும் முன்பதிவு செய்து கொள்ளாமல் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சுமார் 3.10 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. இதனை முன்பதிவு செய்யும் பக்தர்கள் 16 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்து முடித்து விட்டன என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!