தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம்!

0
தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம்!

தெற்கு வங்ககடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணிக்கு நேரத்திற்கு 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு மழைப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 9, 10, 11, 12 ஆகிய நாட்களில் இடைவிடாது பெய்த தொடர் கனமழையால் நீர் நிலைகள் நிலைகள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தலைநகர் சென்னை வெள்ளக்காடாக மாறியது. இத்தகைய சூழலில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகினர்.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – டிச.7ம் தேதி போராட்டம் அறிவிப்பு!

மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்தனர். இடையில் சற்று ஓய்ந்த மழை தற்போது தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

‘ஓமிக்ரான்’ கொரோனா வைரஸ் மாறுபாட்டின் அறிகுறிகள் என்னென்ன? மருத்துவர்கள் விளக்கம்!

அதனை தொடர்ந்து மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அடுத்த அடுத்த 3 மணிக்கு நேரத்திற்கு திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!