திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற்றாலும் தவிக்கும் பக்தர்கள் – முக்கிய கோரிக்கை!

0
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற்றாலும் தவிக்கும் பக்தர்கள் - முக்கிய கோரிக்கை!
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற்றாலும் தவிக்கும் பக்தர்கள் - முக்கிய கோரிக்கை!
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற்றாலும் தவிக்கும் பக்தர்கள் – முக்கிய கோரிக்கை!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தற்போது சர்வ தரிசன டிக்கெட்டுகளை நேரடி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சர்வ தரிசன டிக்கெட்டுகளை பெற்று கொண்டவர்களுக்கு 3 அல்லது 4 நாட்கள் கழித்து சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது என்று பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சர்வ தரிசன டிக்கெட்

இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த ஆன்லைன் முறையில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. அத்துடன் குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகளை மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதனால் கிராமப்புற மக்களுக்கு இந்த டிக்கெட் கிடைக்க கிடைக்க வாய்ப்பு குறைந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் நேரடி முறையில் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்!

அத்துடன் தற்போது சர்வ தரிசன டிக்கெட்டுகளையும் நேரடி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இன்று முதல் 20000 சர்வ தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளது. இந்த டிக்கெட்டில் 3 அல்லது 4 நாட்களுக்கு பின்பு உள்ள தேதி தான் தரிசன தேதியாக குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் பக்தர்கள் 3 அல்லது 4 நாட்கள் வரை ஓட்டல்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உணவு உண்பதற்கு , பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட ஏராளமான செலவினங்கள் ஏற்படுகிறது. அதன் காரணமாக பக்தர்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 – ஹோலி பண்டிகைக்கு முன் வழங்கல்? முழு விவரம் இதோ!

அத்துடன் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு செல்லாமல் திருச்சானூர் பத்மாவதி தாயார், கபிலேஸ்வரர், நிவாச மங்காபுரம் உள்ளிட்ட கோவில்களுக்கு செல்கின்றனர். இதற்கு முன்னதாக பக்தர்கள் சர்வ தரிசன டிக்கெட்டுகளை பெற்று கொண்டால் திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பக்தர்களுக்கு தங்க இடமும், உண்ண உணவும் தேவஸ்தானம் வழங்கப்படும் நடைமுறை இருந்தது. அதனால் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி திருப்பதி ஏழுமலை சுவாமியை மகிழ்ச்சியாக தரிசித்து செல்லலாம். இந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!