தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்!

0
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு - தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு - தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்!

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் விதமாக கூட்டுறவு சங்கத்தில் 5 பவுனு க்கு மிகாமல் உள்ள நகைகளை அடகு வைத்து வாங்கிய கடன்களை, தள்ளுபடி செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு அடிப்படையில் தற்போது பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.

தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா:

தமிழகத்தில் பதவி ஏற்றுள்ள திமுக ஆட்சி பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சட்டசபையில் கூட்டுறவு சங்கங்களில், 5 பவுன் அளவிலான நகைகளை வைத்து நகைக்கடன் வாங்கியவர்களுக்கு, கடனை தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி குறித்து அதிகாரிகள் மூலம் கூட்டுறவு சங்கங்களில் விவரங்களை சேகரித்தது. அப்போது கூட்டுறவு சங்ககளில் முறைகேடு நடத்திருப்பது தெரியவந்தது. அதனால் பல்வேறு நிபந்தனை அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வித்துறை விளக்கம்!

இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் கோயம்பத்தூர் மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் விநியோகம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி அடுத்த வேம்பியில் விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் விழா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மண்டல சார்பதிவாளர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.25) வரை விடுமுறை – அரசு அதிரடி முடிவு!

இந்த சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய துணை சேர்மன் ஜீவிதா ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்களை தொடர்ந்து துணை சார்பதிவாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி ஆகியோர் விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கி ஒரு சில வார்த்தைகள் பேசினார். மேலும் பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன், கூட்டுறவு சங்க கள அலுவலர் மோகன், வங்கி செயலாளர் ஷர்மிளா, ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!