பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.25) வரை விடுமுறை – அரசு அதிரடி முடிவு!
கர்நாடக மாநிலத்தில் ஹர்ஷா வெட்டிக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை அமல்படுத்தப்பட்டது. அத்துடன் ஷிமோகா, பத்ராவதி பகுதியில் வெள்ளிக்கிழமை வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சினை தொடர்பான போராட்டங்கள் எழுந்தன. இதனை கட்டுப்படுத்த போராட்டம் நடத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் கற்பித்தலில் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய உறுப்பினரை சேர்ப்பது எப்படி?
இந்த நிலையில் கடந்த 20ம் தேதி அன்று கர்நாடகாவில் உள்ள ஷிவமொகா மாவட்டத்தில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த ஹர்ஷா என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு காரணமான நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்த இந்த அமைப்பினர் புகார் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க போலீஸ் படையினர் குவிக்கப்பட்டார்கள். இந்த போலீஸ் பாதுகாப்பை மீறி 30க்கும் மேற்பட்ட நபர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். அத்துடன் கலவரத்தில் கல்வீச்சுகளும் நடைபெற்றது
பிப்ரவரி 25 முதல் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!
மேலும் 1 மசூதி உட்பட 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டது. அதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறிப்பாக ஷிமோகா, பத்ராவதியில் உள்ளிட்ட கலவரம் நடைபெற்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பொதுமக்கள் நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கொலை தொடர்பாக 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.