தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!
நாளை முதல் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து பேருந்துகளில் அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பாஸ் வழங்கப்படும் வரை பேருந்துகளில் பள்ளி மாணவ, மாணவியர் சீருடையுடன், அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்தோ பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,941 பேருக்கு தொற்று உறுதி – 350 பேர் பலி!
அரசு கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு ஐடிஐ நிலையங்களில் பயிலும், மாணவ, மாணவியர்கள் அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகள்:
- கொரோனா தாக்கம் குறையும் வரை 20 மாணவர்களை கொண்டு வாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என கூறப்படுகிறது.
- இளங்கலை 2-ம் ஆண்டு, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிழும் வகுப்பு நடைபெறும்.
TN Job “FB Group” Join Now
- பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உயர் கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.