தமிழகத்தில் இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம் தொடக்கம் – அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!
தமிழகத்தில் சென்னை எழும்பூரில் இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி திட்டம் தொடக்கம் :
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,500-ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூரில்18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பெரியார் பல்கலை தேர்வில் சாதி குறித்த சர்ச்சை கேள்வி – அரசு அதிரடி உத்தரவு!
இதனிடையே திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,’ தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதால் அதனை இலவசமாக போட ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் வீடுகளை தேடி சென்று தடுப்பூசி போடப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அவகாசம் 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 31 மெகா தடுப்பூசி முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் டோஸ் 95% பேரும் 2வது டோஸ் 87% பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 2,590 இடங்களில் அரசு கோவிட் தடுப்பு மையங்களில் முதல் டோஸ், 2வது டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மேலும் மெகா தடுப்பூசி முகாம் 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார். அதாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜூலை 12ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் தங்கி முதலமைச்சர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.