தமிழ்நாட்டில் பெரியார் பல்கலை தேர்வில் சாதி குறித்த சர்ச்சை கேள்வி – அரசு அதிரடி உத்தரவு!
அண்மைக் காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு அதிரடி உத்தரவு:
சேலம் மாவட்டம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பெரியார் பல்கலைக்கழகத்தில், லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றன. இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான 2-வது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலாகுமா? அமைச்சர் விளக்கம்!
செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது “வினாத்தாள்கள் வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் தயாரிக்கப்படுவதாகவும் வினாத்தாள்களை சரிபார்த்தால் கசிந்து விடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர், இந்த கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்த சர்ச்சை கேள்வி குறித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது உயர்கல்வித்துறையின் உயர் அலுவலகர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அந்த நடவடிக்கை துறை ரீதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சாதி ஒழிப்பை வலியுறுத்தி தனது கடைசி காலம் வரை போராடிய தந்தை பெரியார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் சாதி பற்றி கேட்ட கேள்வி அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.