மர்ம நபரால் நடு ரோட்டில் வைத்து சுடப்பட்ட முன்னாள் பிரதமர் – பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்!
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் அபே ஷின்சோ இன்று (ஜூலை 8) நடுரோட்டில் வைத்து மர்ம நபரால் சுடப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.
துப்பாக்கிச் சூடு
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக பதவி வகித்திருந்த ஷின்சோ அபே மீது இன்று (ஜூலை 8) துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவம் அந்நாட்டின் முக்கிய நகரமான நாரா என்ற இடத்தில் வைத்து நடைபெற்றிருக்கிறது. அதாவது, நாரா என்ற பகுதியில் வைத்து பொது மக்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்த சம்பவம் நடைபெற்ற உடன் மேடையிலேயே மயங்கி விழுந்த பிரதமர் ஷின்சோ தற்போது நாரா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்போது துப்பாக்கியால் சுடப்பட்ட பிரதமர் ஷின்சோவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் சுயநினைவை இழந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் அளித்துள்ளன.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
தற்போது 67 வயதான ஷின்சோ அபே ஜப்பான் நாட்டில் நீண்ட காலமாக பிரதமர் பதவியில் இருந்து ஆட்சி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, ஜப்பான் நாட்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மேலவை தேர்தல் தொடர்பான பரப்புரையில் இருந்த போது தான் ஷின்சோ அபே மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அந்நபர் அதிபரை பின்னால் இருந்து சுட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.