தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
கடந்த ஒரு சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா 4ம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று (ஜூலை 7) ஒரே நாளில் 2,765 பேருக்கு நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
நாடு முழுவதும் கொரோனா 4ம் அலைத்தொற்று பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய் தாக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இந்தியாவில் ஒட்டு மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது 4 கோடியை தாண்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா 4ம் அலைப்பரவல் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதே போல தமிழகத்திலும் கடந்த ஒரு சில நாட்களாக பதிவு செய்யப்பட்டு வரும் புதிய பாதிப்புகள் 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,765 பேருக்கு புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,062 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 408 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 184 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 34,93,599 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? முக்கிய தகவல் வெளியீடு!
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒரே நாளில் 2,103 பேர் குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 18,378 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் புதிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு பொது மக்கள் அனைவரும் மீண்டும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.