புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – 15 நாட்களில் பெறுவது எப்படி?
புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாகவே எளிமையாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதாவது 15 நாட்களில் ரேஷன் கார்டு கிடைக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு இன்றியமையாத ஒன்றாகி விட்டது. ரேஷன் கார்டில் ஏதேனும் பிழைகள் இருந்தாலும், ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க விரும்பினாலும் உடனடியாக செய்து விட வேண்டும். ரேஷன் கார்டில் உள்ள நபர் இறந்து விட்டாலும் பெயரை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். தற்போது ரேஷன் கார்டை 15 நாட்களிலேயே ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். மேலும் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.
Exams Daily Mobile App Download
ரேஷன் கார்டு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ரேஷன் கார்டின் https://www.tnpds.gov.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதில் வரும் வடிவத்தினை விண்ணப்பதாரர் பிழையில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அதில் கேட்கப்படும் ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் முதலிய அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை கோடை விடுமுறை – மாநில கல்வித்துறை அறிவிப்பு!
ஒவ்வொரு ஆவணத்தின் அளவும் 1.0 எம்பி அளவில் இருக்க வேண்டும். பின்பு குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எத்தனை எரிவாயு இணைப்புகள் உள்ளது என்பதற்கான பதிவுகளையும் சரியாக பதிவிட வேண்டும். பின்பு கன்ஃப்ர்ம் என்கிற பகுதியை கிளிக் செய்து ஒரு குறிப்பிடல் எண் ஒன்று கிடைக்கும். அந்த எண்ணை சரியாக குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அனைத்து முறையையும் முடித்து 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டை பெற்றுக் கொள்ளலாம். குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் 27,000 ரூபாய்க்கு குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்படும்.