தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்தும் நேற்றைய தினம் ஜூன் 13ல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலத்தை கருத்தில் கொண்டு இல்லம் தேடி வரும் கல்வித்திட்டத்தை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அமல்படுத்தியுள்ளார்.
கல்வித்துறை அமைச்சர்:
தமிழகத்தில் நேற்று ஜூன் 13 அன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளும் நல் முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், ஜூன் 20ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கும், 27ந் தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் மீண்டும் அதிகரித்து வருவதால் அதற்கான பல முன்னேற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மானியம் வராததற்கு ‘இது’ தான் காரணம்!
தற்போது நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது குறித்து கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசிய பொழுது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் புது மாணவர்களின் சேர்க்கைக்கு மாற்று சான்றிதழ் வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது என கூறினார். அது மட்டுமல்லாமல் அம்மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இல்லம் தேடி வரும் கல்வி திட்டத்தை முதல் 6 மாதங்களுக்கு மட்டும் செயல்படுத்துமாறு பேச்சுவார்த்தை நடந்தது. அதாவது தன்னார்வலர்கள் கொண்டு தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் வகுப்புகள் எடுப்பதே இத்திட்டத்தின் குறுகிய விளக்கம். ஒவ்வொரு குழு மாணவர்களுக்கும் வாரம் முழுவதும் சுமார் ஆறு மணிநேர வகுப்புகள் நடைபெறும். மேற்குறிப்பிட்ட மாத இடைவேளைக்கு பிறகு படிப்படியாக இல்லம் தேடி வரும் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளில் மட்டும் தான் கலந்து வேண்டும் என்பது காட்டாயம் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.