LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மானியம் வராததற்கு ‘இது’ தான் காரணம்!
இந்தியாவில் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு சார்பாக மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சிலிண்டருக்கு மானிய உதவித்தொகை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டை சிலிண்டர் கணக்குடன் இணைக்கா வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலிண்டர் மானியத்தொகை:
இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். சிலிண்டர் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. மத்திய அரசு சார்பாக பிரதமரின் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒரு வருடமாக சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த விலை ஏற்றத்தை குறைக்க கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிலிண்டருக்கான மானியத்தொகையை மத்திய அரசு நிறுத்தி விட்டது என்று புகார்கள் எழுந்துள்ளது.
ரயிலில் பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு – IRCTC புதிய வசதி அறிமுகம்!
மாதந்தோறும் வாடிக்கையாளர்கள் வாங்கும் சிலிண்டர்களுக்கு மானியத்தொகை வரவு வைக்கப்பட்டு வந்தது. இடையில் நிலவிய கொரோனா பேரிடரின் போது சிலிண்டருக்கான மானியத் தொகை வரவு வைக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும் சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் சிலிண்டர் மானியம் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டது. உங்களுடைய ஆதார் கார்டை சிலிண்டர் கணக்குடன் இணைக்காவிட்டால் மானியம் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
அதே போல குடும்பத்தின் ஆண்டு வருமானம் அரசு நிர்ணயித்த அளவைத் தாண்டியிருந்தாலும் மானியத்தொகை கிடைக்காது. ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் மானியம் வாராது. அதனால் மானியத்தொகை வரவில்லை என்றால் முதலில் உங்களின் ஆண்டு வருமானம் மற்றும் ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டும். ஆதார் எண்ணை இணைக்க வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் சென்று மானியத்துக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அருகில் உள்ள சிலிண்டர் ஏஜென்சியில் கொடுக்க வேண்டும். 18000-2333-555 என்ற நம்பருக்கு கால் செய்து உங்களுடைய ஆதார் மற்றும் சிலிண்டர் விவரங்களை வழங்கி இணைக்கலாம். SMS மூலமாகவும் இணைக்கலாம்.