TCS, HCL, Infosys உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH குறித்த அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் தொடக்க நிறுவனங்கள் வரை, அனைவரும் மெதுவாக வொர்க் பிரம் ஹோம் முறையை குறைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் பிற நிறுவனங்களின் பணியாளர்களில் 50% பணியாளர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய தகவல்:
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020ம் ஆண்டு முதல் பல லாக்டவுன் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், பல்வேறு அலுவலகப் பணியாளர்களும் வீட்டிலிருந்து பணிபுரிய நிறுவனங்கள் அனுமதி அளித்தன. கடந்த 2 ஆண்டுகளாக பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறி பல ஐ.டி.நிறுவனங்கள் ‘வொர்க் பிரம் ஹோம்’ முறையை தொடர்ந்து வருகின்றன. தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் இந்த சமயத்தில், இந்தியாவில் பல நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலத்திற்கு திரும்பும் படி அழைத்து வருகின்றன.
Exams Daily Mobile App Download
சமீபத்திய நடவடிக்கையில், தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், மின்சார ஸ்கூட்டர்களுக்கான மாதாந்திர சந்தா திட்டத்தின் வாக்குறுதியுடன், அலுவலகத்திற்குத் திரும்புமாறு தனது ஊழியர்களை வலியுறுத்தியது. இந்நிலையில் TCS இன் 25-25 மாடல் மக்களை மீண்டும் அலுவலகத்திற்கு கொண்டு வருவதையும், படிப்படியாக ஹைப்ரிட் வேலை மாதிரிக்கு மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் ஊழியர்களில் 25 சதவீதத்துக்கு மேல் எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் HR தலைவர், இன்ஃபோசிஸ் நிறுவனமும் எதிர்காலத்தில் ஹைப்ரிட் மாதிரி வேலைகளைத் தொடர உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கவனத்திற்கு – நாளை தேர்வுகள் நிறைவு!
இதையடுத்து தொழில்நுட்ப நிறுவனமான HCL ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதால், அதுவும் ஹைப்ரிட் மாடலை நோக்கிச் செல்கிறது. FMCG நிறுவனமான நெஸ்லே, ஹைப்ரிட் மாதிரி வேலைகளைத் தொடர திட்டமிட்டுள்ளது. இதை அடுத்து ஆப்பிள் நிறுவனம், மே 2 ஆம் தேதிக்குள், ஊழியர்கள் வாரத்தில் குறைந்தபட்சம் 2 நாட்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று அறிவித்தது. இருப்பினும், இந்த அறிவிப்பு ஊழியர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை மற்றும் கிட்டத்தட்ட 76% தொழிலாளர்கள் நிறுவனத்தின் அலுவலகக் கொள்கைக்குத் திரும்புவதற்கு எதிராக இருப்பதாகக் கூறப்படுகிறது.