தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கவனத்திற்கு – நாளை தேர்வுகள் நிறைவு!

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கவனத்திற்கு - நாளை தேர்வுகள் நிறைவு!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கவனத்திற்கு - நாளை தேர்வுகள் நிறைவு!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கவனத்திற்கு – நாளை தேர்வுகள் நிறைவு!

தமிழகத்தில் 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 5ம் தேதி தொடங்கிய ஆண்டு இறுதித்தேர்வு நாளையுடன் (மே 13) முடிவடைய உள்ளது. அதன் பிறகு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இறுதித்தேர்வு :

தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த ஆன்லைன் கல்வி ஸ்மார்ட்போன் வைத்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. பிற ஏழை எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி எட்டா கனியாகவே இருந்து. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு கல்வி தொலைக்காட்சியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடங்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. அதனால் 10,12 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதே போல பிற வகுப்புகளுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்வின்றி தேர்ச்சி முறை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்ததை அடுத்து தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகினர். கால அட்டவணையின் படி மே மாத ஆரம்பத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. அதனை தொடர்ந்து 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மாதம் ரூ.1000 உதவித்தொகை! பணிகள் தீவிரம்!

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு நாட்கள் மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கால அட்டவணையின் படி நடைபெற்ற இந்த தேர்வு நாளையுடன் முடிவடைய உள்ளது. 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மே 13 ம் தேதி கடைசி வேலை நாளாகும். ஜூன் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கப்படவுள்ளது. ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!