தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியீடு!
தமிழ்நாட்டில் கோடைகால விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் செயல்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து இந்த ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில், 10 ,11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று உள்ளது. இதனிடையில் அனைத்து பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மே 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
Exams Daily Mobile App Download
தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, இணையவழி தொடக்க நிகழ்ச்சி, மற்றும் 2022-23 கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்ட நாட்காட்டி வெளியிடுதல் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தபோது, பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள், 25 வகையான சான்றிதழ்களை, மக்கள் நேரடியாக விண்ணப்பித்து பெற வேண்டிய அவசியம் இல்லாமல், எளிமையான முறையில் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் மின்பதிவேடுகள் இல்லாமல் இருந்தபோது ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்ட ரிஜிஸ்டர்களை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது.
BEL நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இதை எளிமையாக்க பணி பயன் செயலி, கல்வியாண்டிற்கான நாட்காட்டி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வரும் ஜூன் மாதம் 13ம் தேதி 1-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 20-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பிற்கும், ஜூன் 27-ம் தேதி முதல் 11-ம் வகுப்புகள் தொடங்கப்படும். இதுதவிர மாணவர்கள், இணையம் வாயிலாக அடுத்த ஆண்டு பள்ளி திறப்பு, காலாண்டு அரையாண்டு தேர்வு எப்போது என்பதை பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல் விடுமுறை தினங்கள் எப்போது என்ற விவரங்களும் அதில் உள்ளன என தெரிவித்தார்.