ஆதார், பான் கார்டை இணைக்காதவர்கள் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் 2 மடங்கு அபராதம்!

0
ஆதார், பான் கார்டை இணைக்காதவர்கள் கவனத்திற்கு - இதை செய்யாவிட்டால் 2 மடங்கு அபராதம்!
ஆதார், பான் கார்டை இணைக்காதவர்கள் கவனத்திற்கு - இதை செய்யாவிட்டால் 2 மடங்கு அபராதம்!
ஆதார், பான் கார்டை இணைக்காதவர்கள் கவனத்திற்கு – இதை செய்யாவிட்டால் 2 மடங்கு அபராதம்!

இந்தியாவில் அனைவரும் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டும் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். தற்போது இணைக்கப்படாதவர்களுக்கு அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

ஆதார் – பான் இணைப்பு:

இந்தியாவில் ஆதார் அட்டை தற்போது அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக உள்ளது. இதையடுத்து அரசின் நலத்திட்டங்கள் கூட ஆதார் கார்டு மூலமாக தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர் சார்ந்தவைகளுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டியுள்ளது. இதையடுத்து வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதில் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் வங்கி கணக்கு திறப்பதற்கும், பங்கு பரிவர்த்தனைகள், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக முதலீடு செய்பவர்களுக்கு பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பஸ் டிரைவர் & கண்டக்டர்கள் கவனத்திற்கு – போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!

இதனை தொடர்ந்து வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக கால அவகாசம் முடிவடைந்தும் மீண்டும் இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்தது. தற்போது இதற்கான அபராத தொகையை இரு மடங்காக உயர்த்தியுள்ளது. அதாவது மார்ச் 31க்கு மேல் இணைப்பவர்கள் ரூ.500 செலுத்தி இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

ஆனால் தற்போது ஜூன் 30க்கு மேல் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பவர்களுக்கு 2 மடங்காக வசூலிக்கப்பட உள்ளது. அதாவது ஜூன் 30ம் தேதிக்கு மேல் இணைப்பவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காதபட்சத்தில் பான் கார்டு செயலிழந்தாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பான் எண்ணை வழங்கவோ, தெரிவிக்கவோ அல்லது சமர்ப்பிக்கவோ வேண்டுமெனில் இந்த செயலிழந்த பான் எண்ணை பயன்படுத்த முடியாது. அதனால் உடனடியாக பான் ஆதார் எண்ணை இணைப்பது நல்லது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!