தமிழகத்தில் அரசு பஸ் டிரைவர் & கண்டக்டர்கள் கவனத்திற்கு – போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் அரசு பஸ் டிரைவர் & கண்டக்டர்கள் கவனத்திற்கு - போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் அரசு பஸ் டிரைவர் & கண்டக்டர்கள் கவனத்திற்கு - போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் அரசு பஸ் டிரைவர் & கண்டக்டர்கள் கவனத்திற்கு – போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு முக்கிய அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

முக்கிய உத்தரவு:

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேட்டில் தங்களது வருகையை பதிவு செய்து வருகின்றனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் அரசு/ தனியார் அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. அனைவரும் விரல் வைப்பதால் வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக கருதி பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை, தமிழக அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் வருகை பதிவு பயோமெட்ரிக் கருவி மூலம் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படுகிறது. மேலும் தொழில்நுட்ப பணியாளர்கள் காலை 8 மணிக்கும், நிர்வாகப் பணியாளர்கள் காலை 10 மணிக்கும் பணிக்கு வரும் போது வருகை பதிவு செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

 

மாலை பணி முடிந்து செல்லும் போது, பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஓட்டுனர், நடத்துநர், பேருந்து தடத்தில் செல்வதற்கு பணிமனை வாயிலிருந்து புறப்படும் பொழுது சோதனை முறையில் பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும். பேஸ்புக் அடிப்படையில் பயோமெட்ரிக் சிஸ்டம் வருகைப் பதிவு முறை மேம்படுத்தப்படும். மேலும் போக்குவரத்துத் துறையில் புதிதாக பணியாளர்கள் பணிமனையில் சேர்ந்தாலும் அவர்களுடைய பெயரையும் உடனடியாக பயோமெட்ரிக் முறை வருகை பதிவில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!