மத்திய அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் – அக்.12 பணிகள் தொடக்கம்!
இந்தியாவில் மத்திய அரசு 2022-2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணியை அக்டோபர் 12ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.
பட்ஜெட் தயாரிக்கும் பணி:
இந்தியாவில் கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் துறைகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. ஏராளமான மக்கள் தங்களின் வேலைகளை இழந்து மிக சிரமப்பட்டதால் அரசுக்கு வரி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் வருவாய் இழந்தனர். இந்தியா கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு பட்ஜெட் தயாரிக்கும் பணியை மேற்கொண்டது.
2022ல் ஊழியர்களின் சராசரி சம்பள உயர்வு 8.6% ஆக அதிகரிப்பு – ஆய்வு அறிக்கை தகவல்!
பல்வேறு துறையினரிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் இந்த நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் மத்திய அரசு பொருளாதார வளர்ச்சிக்காக பட்ஜெட் தயாரிக்கும் பணியை நிதியமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
விவசாயிகளுக்கு அடையாள அட்டை – மத்திய அரசின் புதிய திட்டம்!
வரும் அக்டோபர் 12ம் தேதி பட்ஜெட் தயாரிப்பு தொடங்கயுள்ளது. பிரதமர் மோடி இரண்டாம் முறை பதவியேற்ற பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற இருக்கும் 4வது பட்ஜெட் தயாரிப்பு ஆகும். இந்தியாவில் நலிவடைந்த பொருளாதாரம் மீண்டு வருகின்ற இந்த வேளையில் நடைபெறவிருக்கும் இந்த பட்ஜெட் தயாரிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.