விவசாயிகளுக்கு அடையாள அட்டை – மத்திய அரசின் புதிய திட்டம்!
மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு அறிவித்துள்ள திட்டங்களை எளிதாக செயல்படுத்தும் வகையில் புதிய அடையாள அட்டை ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளது.
அடையாள அட்டை:
மத்திய அரசு 2020 ல் அறிவித்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியின் புறநகர் பகுதியில் பல மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்டத்தினால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படும் என்றும், பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே இதனால் பலமடையும் என்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய அரசு புதிய சட்டத்தினால் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Airtel நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகைகள் – முழு விபரம் இதோ!
ஆனால் இதைத்தவிர, மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நலன் கருதி பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயிர்காப்பீடு, பிரதான் மந்திரி கிசான் திட்டம் திட்டங்கள் செயலில் உள்ளது. இந்நிலையில், அரசு வழங்கும் திட்டங்களை விவசாயிகள் எளிதாகப் பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக மத்திய அரசின் திட்டங்களில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
ஒரே நேரத்தில் 4 சாதனங்களை இணைக்கும் வாட்ஸ்அப்-ன் புதிய அம்சம் – என்னென்ன ஸ்பெஷல்!
இது குறித்து, மத்திய விவசாயிகள் நலத்துறை கூடுதல் செயலாளர் விவேக் அகர்வால், விவசாயிகளுக்கு 12 இலக்க அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரசு வழங்கும் சலுகைகளை விவசாயிகள் எளிதாக பெறலாம். எட்டு கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அதன்பின், விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கும் திட்டமிட எளிதாக இருக்கும் என்று நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.