கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50,000 – மத்திய அரசு உத்தரவு!
கொரோனா தாக்கத்தின் தீவிரத்தால் அதிகமாக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. எனவே கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு:
கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் உயிர் இழப்புகளும் அதிகமானது. அதன் காரணமாக பலர் தங்கள் பெற்றோர்களை இழந்தனர். எனவே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலா் ஆஷிஷ் குமார் சிங் அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நேருக்கு நேர் சந்திக்கும் பாரதி & கண்ணம்மா, அடுத்து நடக்கும் ட்விஸ்ட் – வேணுவின் திட்டம் பலிக்குமா?
அதில், கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தலா ரூ. 50 ஆயிரம் உதவித்தொகையை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தான் மாநில அரசுகள் வழங்க வேண்டும். நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட தேதியின் தொடக்கத்தில் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உதவித்தொகையை அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலையை தொடர்ந்து தற்போது நோய் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 3.8 கோடி வேலைவாய்ப்புகள் – 29% அதிகரிப்பு! மத்திய பணியாளர் அமைச்சர் தகவல்!
தற்போது தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி தற்போது வரை 4,47,194 லட்சம் போ் கொரோனாவால் உயிரிழந்துள்ளதக கூறப்படுகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரத்தை மாநில அரசுகள் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் 22-ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.