இந்தியாவில் 3.8 கோடி வேலைவாய்ப்புகள் – 29% அதிகரிப்பு! மத்திய பணியாளர் அமைச்சர் தகவல்!
இந்தியாவில் 2021 -2022 ம் நிதியாண்டில் 29% வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புகள்:
இந்தியாவில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் தொழில் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு மக்கள் வேலை பறிபோனது. இந்த நிலையில் வேலை இன்றியும், கொரோனா அச்சத்தாலும் வீடுகளில் முடங்கினர். படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. அனைத்து நிறுவனங்களும் கொரோனா விதிக்கப்பட்ட ஊரடங்கால் வளர்ச்சி இன்றி தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததால் ஊழியர்களுக்கு வேலை அளிக்க முடியாத நிலை நிலவியது.
தமிழகத்தில் அக்.1 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விருப்ப பதிவு – முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் நடப்பாண்டு வரை கொரோனா பெருந்தொற்று பரவி வருவதால் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்தது. இதனை தடுக்க மத்திய. மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக தற்போது இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் 29% அதாவது 3.8 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தங்கும் இடம் மற்றும் ரெஸ்ட்ராண்ட், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பி.பி.ஓ ஆகிய 9 துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளது.
இந்தியாவில் சரியும் கொரோனா – ஒரே நாளில் 18,795 பேருக்கு தொற்று! 179 பேர் பலி!
இந்த 9 துறைகள் பொதுமுடக்க நேரத்திலும் 80.7% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கியுள்ளன. இந்த நிலையில் 16.6% நிறுவனங்கள் ஊதியத்தை குறைத்திருப்பதும் 2.7% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமலும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேபோல் பணிக்கு செல்லும் மகளிர் எண்ணிக்கை 31 சதவீதம் குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.