மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் ரத்து? செலவீனத்துறை எச்சரிக்கை!
கொரோனா கால கட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு நீட்டிப்பு செய்தால் மத்திய அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் என்று செலவினத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா
இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் ஏழை எளிய மக்கள் வேலையில்லாமால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதனால் ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிவதற்காக பிரதான் மந்திரி கரீப் யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலமாக இலவசமாக உணவு தானியங்களை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தின் காலம் முடிவடைந்த நிலையில் செப்டெம்பர் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டது. அதனால் இதற்காக ரூ.2.07 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி வரை அரசுக்கு செலவினம் ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் என்று செலவீனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தொழிற்கல்வியில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு – பட்டியல் வெளியீடு!
இது தொடர்பாக செலவீனத்துறை வெளியிட்ட அறிக்கையில், பிரதான் மந்திரி கரீப் யோஜனா திட்டத்தை நீட்டிப்பு செய்வது மத்திய அரசுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரி குறைப்பு செய்வதும் மத்திய அரசின் தற்போதைய நிதிநிலைக்கு உகந்ததாக இருக்காது. அத்துடன் மத்திய அரசு அறிவித்துள்ள, சிலிண்டருக்கான மானியம் மீண்டும் அறிமுகம், பெட்ரோல் மற்றும் டீசல் வரி குறைப்பு, சமையல் எண்ணெயில் சுங்க வரிக்குறைப்பு உள்ளிட்டவை மத்திய அரசின் நிதிநிலை மோசமடைய செய்யும். அதனால் பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜனா திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.