தமிழகத்தில் தொழிற்கல்வியில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு – பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் பயின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% வரைக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீடு பெற விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி விவரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு:
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 அன்று வெளியானது. இந்த கல்வியாண்டிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் சேர முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதாவது, அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை வழங்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை https://studentrepo.tnschools.gov.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பெயர் விடுபட்டிருந்தால் மாணவர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கு மேல்முறையீடு செய்யலாம் எனவும், மேல்முறையீடு செய்யும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி எதிரொலி – பள்ளிகளுக்கு விடுமுறை! அரசு அதிரடி உத்தரவு!
தற்போதைக்கு 12 வகுப்பு பயிலும் 2.7 லட்சம் மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பள்ளிக் கல்வியிலிருந்து உயர் கல்விக்கு எந்தச் சிரமமுமின்றி பதிவு செய்யலாம். மாணவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தான் பயின்றிருக்கிறார் என்றால் கண்டிப்பாக அந்த மாணவர்களின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டியலில் பெயர் விட்டு போன மாணவர்கள் விவரங்களை சமர்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.