பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு புதிய திட்டம் – வட்டி விகிதம் உயர வாய்ப்பு!
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் முதலிய எரிவாயுக்களின் விலை கணிசமாக அதிகரித்து வருவதன் காரணமாக பணவீக்கமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி:
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதன் காரணமாக பணவீக்கமும் உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை தணிப்பதற்காக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு தற்போது குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு மீதான இறக்குமதி வரியையும் மத்திய அரசு கணிசமாக குறைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருவதன் காரணமாக பணவீக்கத்தின் நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூன் 8ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கொள்கை கூட்டத்தில் பணவீக்கம் காரணமாக வட்டி விகிதம் உயர்த்த வேண்டுமா என ஆலோசிக்க உள்ளனர். ஜூன் மாதமும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால் இந்தக் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்படி வட்டிவிகிதம் அதிகரித்தாலும் கூட குறைந்த அளவே அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தை தணிப்பதற்காக கோதுமையின் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புகள் மிகவும் குறைவு என நிபுணர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துமா என்பது ஜூன் 8ஆம் தேதிக்கு பிறகுதான் எதுவாக இருந்தாலும் முடிவு செய்ய முடியும்.