தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களை மேம்படுத்த சிறப்பு திட்டம் – ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!

0
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களை மேம்படுத்த சிறப்பு திட்டம் - ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களை மேம்படுத்த சிறப்பு திட்டம் - ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களை மேம்படுத்த சிறப்பு திட்டம் – ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் எதுவும் நடத்தாத காரணத்தினால் கல்வித் திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் ஜூன் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்கிற தலைப்பில் கற்பித்தல் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.

எண்ணும் எழுத்தும் பயிற்சி :

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக தான் பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும், இந்த இரண்டு ஆண்டுகளும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்ததும் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகத்தான் வகுப்புகள் நடைபெற்ற காரணத்தினால் மாணவர்களின் சிரமத்தை குறைக்க 35% வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் கோடை விடுமுறைகளில் கூட பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒரு சில மாநிலங்களில் மாணவர்களின் கற்றல் திறனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாமல் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தியதால் கற்றல் திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

அதாவது இந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் எதுவுமே பயிலாமல் மூன்றாம் வகுப்பில் வந்து அமர்ந்துள்ளனர். தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் துவங்க இருக்கிறது. இதற்கிடையே மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க அதிகரிக்க ஜூன் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. அதாவது எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களுக்கு புகைப்படங்கள், பவர்பாயிண்ட், செயல்முறை விளக்கம், மகிழ்வோடு கற்போம் போன்ற முறைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!