மத்திய அரசின் ‘அடல் பென்சன் யோஜனா’ திட்டம் – மாதம் 5,000 வரை ஓய்வூதியம்!
மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யும் போது குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1,000 முதல் 5000 வரை கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பதாரர் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம்.
பென்ஷன் திட்டம்:
இந்தியாவில் அமைப்புசாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வு காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக 2015ஆம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. 18 முதல் 40 வயதுடைய இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகளிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசு பணியில் இல்லாதவர்களுக்கும் இந்த மூலம் மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்கிறது. இத்திட்டத்தில், டெபாசிட் செய்பவர்களுக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஓய்வூதியம் கிடைக்கும்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் – வலுக்கும் கோரிக்கை!
குறைந்த பட்சம் ரூ.1,000 முதல் 5000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். ஒரு வேளை கணக்கு தொடங்கிய நபர் இறந்து விட்டால் அவரது நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஒரு நபர் 18 வயதில் அடல் பென்ஷன் யோஜனாவில் சேர்ந்து மாதம் ரூ.210 டெபாசிட் செய்து வந்தால் 60 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.5000 மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் 30 அல்லது அதற்கும் குறைவான வயதுடைய கணவன்-மனைவி இருந்தால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் 577 ரூபாய் அடல் பென்ஷன் கணக்கில் செலுத்தலாம்.
மேலும் இதில் வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் இறந்தால், உயிருடன் இருக்கும் பங்குதாரர் ஒவ்வொரு மாதமும் முழு ஆயுள் ஓய்வூதியத்துடன் ரூ.8.5 லட்சம் பெறுவார். இந்த அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகை உண்டு. இந்த திட்டத்தில் நீங்கள் எப்போது முதல் முறையாக இணைகிறீர்களோ, அதே தேதியில் அடுத்தடுத்த மாதங்களில் பணம் செலுத்த வேண்டும்.