தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் – வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்:
இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் 2004 ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் எவ்வித பண பலன்களையும் ஓய்வு காலத்திற்கு பிறகு ஊழியர்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அனைத்து மாநில அரசு ஊழியர்களும் எதிர்த்தனர். எனவே ஊழியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் இது குறித்து அரசு எவ்வித பரிசீலனைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த நேரத்தில் கடந்த வருடம் ஆட்சி பெறுபேற்ற திமுக தலைமையிலான அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதிகளில் தெரிவித்து இருந்தது.
ரூ. 50,000/- மாத ஊதியமாக வேண்டுமா? – இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
அதாவது அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், சம்பள உயர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதேபோல் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று தோகைமலை யூனியன் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.