இன்று முதல் அருங்காட்சியகங்கள் திறப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

0
இன்று முதல் அருங்காட்சியகங்கள் திறப்பு - மத்திய அரசு அறிவிப்பு!!
இன்று முதல் அருங்காட்சியகங்கள் திறப்பு - மத்திய அரசு அறிவிப்பு!!
இன்று முதல் அருங்காட்சியகங்கள் திறப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டின் புராதன சின்னங்கள், அருங்கட்சியங்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு:

கொரோனா தொற்றின் 2ம் அலை நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வர அரசுகள் தடை விதித்திருந்தது.

ESI காப்பீட்டு கழக பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கொரோனா நிவாரணம்!

பொதுமக்களின் அவசர மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே பயணிக்க மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள், அருங்காட்சியங்கள், நினைவு சின்னங்கள் போன்ற அனைத்தும் நோய் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டது. இந்த சமயத்தை பயன்படுத்தி பல இடங்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? மருத்துவர்கள் கணிப்பு!

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தீவிரம் மெல்ல குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மத்திய அரசின் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியங்கள் ஆகியவை ஜூன் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்த நிலையில், இன்று இவை திறக்கப்பட்டு விட்டது. இருபினும், பார்வையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!