அரசு தொடக்க, மேல்நிலைப்பள்ளிகள் ஜூலை 1 முதல் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஜூலை 1 முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள 1.5 லட்சம் அரசு தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, மாநிலம் முழுவதும் உள்ள உதவி கல்வி இயக்குநர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின் படி, ‘கடந்த மாதம் முதல் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவங்கப்பட்டாலும், இலவச பாட புத்தககங்கள் விநியோகம் மற்றும் பராமரிப்பு, தூய்மை பணிகள் போன்ற பணிகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும்.
ESI காப்பீட்டு கழக பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கொரோனா நிவாரணம்!
மேலும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்த அறிவுத்தப்பட்டுள்ளனர். தவிர உத்திர பிரதேசத்தில் பகல்நேர உணவு திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணத்தை மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோரின் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டிருந்தது.