ESI காப்பீட்டு கழக பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கொரோனா நிவாரணம்!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறந்த பயனர் குடும்பத்துக்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (ESI) சார்பாக நிவாரணம் வழங்கப்படும் என தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ESI நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 35,000 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 30,068 பேர் மரணமடைந்துள்ளனர். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, பாதிக்கப்படாதவர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. கொரோனா தொற்றால் தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளும் இழப்பீட்டு தொகைகளை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? மருத்துவர்கள் கணிப்பு!
இதனால் தொடர்ந்து தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் நிவாரணம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சமாக, 18 ஆயிரம் ரூபாய் மாதாந்திர நிவாரண தொகையாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த தொகையை பெறுவதற்கு இ.எஸ்.ஐ.சி.,ல் காப்பீட்டாளராக பதிவு செய்திருக்க வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர் குறைந்தபட்சம் 70 நாட்கள் சந்தா செலுத்தி இருக்க வேண்டும். இந்த திட்டம், 2022 மார்ச் வரை செயல்படும் என அரசு காப்பீட்டு கழக மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூலை 1 வரை சிறப்பு ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மேலும் இ.எஸ்.ஐ., திட்டத்தின் இருக்கும் இறந்த காப்பீட்டாளரின் குடும்ப உறுப்பினர் மாதம் 120 ரூபாய் செலுத்தி, இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனையிலோ, மருந்தகத்திலோ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவோர் கொரோனாவால் இறந்தவரின் இறப்பு சான்றிதழ், கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் , வாரிசுதாரர்களின் அடையாளம் மற்றும் பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றை வைத்து இ.எஸ்.ஐ.சி., கிளை அலுவலகத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 044- 2830 6363 என்ற தொலைபேசி எண் மூலம் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என இஎஸ்ஐ காப்பீட்டு கழகம் தெரிவித்துள்ளது.