தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? மருத்துவர்கள் கணிப்பு!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? மருத்துவர்கள் கணிப்பு!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? மருத்துவர்கள் கணிப்பு!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? மருத்துவர்கள் கணிப்பு!

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் சூழலில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் மீண்டுமாக பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானது இல்லை என மருத்துவர்கள் கணிப்பு விளக்குகிறது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 12 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்னதாக 36 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா தொற்றானது தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் என பொதுக்களிடையே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிய பிறகே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜூலை 1 வரை சிறப்பு ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அதேபோல மருத்துவ வல்லுனர்கள் கூறுகையில், கொரோனா பாதிப்பானது ஓய்ந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து சிந்திக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இது தவிர இந்தியாவில் கொரோனாவின் முதலாம் மற்றும் இரண்டாம் அலை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று கணிக்கப்பட்ட மூன்றாம் அலையை எதிர்கொள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய (TNPSC) காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!

அதன் படி, குழந்தைகள் நல மருத்துவர்கள் 3 ஆம் அலைக்கு தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக 100 படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் ICU வசதி படுக்கைகளும் ஏற்படுத்த வேண்டும். தவிர இவற்றை கண்காணிக்க குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரை பொறுப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

ஜூன் 15 முதல் வார இறுதி, இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் பொதுமருத்துவர்கள் மயக்கவியல் துறை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பள்ளிகளை மீண்டுமாக திறப்பது பாதுகாப்பாக இருக்காது என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். எனவே இப்போதைக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவங்குவதற்கு சாத்தியமில்லை என தகவல்கள் தெரிவிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!