தமிழகத்தில் பிப்.16 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 16ம் தேதி அன்று அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பான பண்டிகை, கோவில் திருவிழாக்கள் தியாகிகளின் நினைவு நாள் போன்றவைகளை முன்னிட்டு அம் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அம்மாவட்ட மக்கள் பண்டிகையை சிறப்பிக்க கொண்டாடும் வகையிலும், வெளி மாநில மற்றும் மாவட்ட மக்கள் வந்து கலந்து கொள்ளும் வகையிலும் இவ்விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.7.3 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
அம்மாவட்டத்தில் உள்ள தக்கலையில் பீர்முகமது ஒலியுல்லா என்ற இஸ்லாமிய துறவி அடக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த இடத்தில் ஆண்டுதோறும் அடக்கம் செய்யப்பட்ட நாளில் ஆண்டுதோறும் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் அன்றய தினம் அந்த இடத்தில் ஞானப்புகழ்ச்சி பாடல்கள் பாடப்படும் இந்த விழா 18 நாட்கள் வரை நடைபெறும். இதன் ஆண்டு நினைவு விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை மார்க்க பேருரை நடைபெறும்.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புத்தகம் இல்லா தினம்!
தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்தில் பிப்ரவரி 16ம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு பிப்ரவரி 26ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.