தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புத்தகம் இல்லா தினம்!

0
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புத்தகம் இல்லா தினம்!
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புத்தகம் இல்லா தினம்!
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புத்தகம் இல்லா தினம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் புத்தகம் இல்லா தினம் கொண்டாட வேண்டும் என்று அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புத்தகம் இல்லா தினம்:

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலன் கருதி மீண்டும் பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகளை நடத்தலாம் என்று அரசு அனுமதித்துள்ளது. அத்துடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தற்போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி புரியும் பள்ளியில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் இல்லா தினம் கொண்டாட வேண்டும் என்று மத்திய திட்ட ஏற்பளிப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி மாணவர் ஒருவருக்கு ரூ.10 வீதம் 1263550 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.126.355 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கி மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகை செய்வதாகும். அத்துடன் மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறன்களை சுதந்திரத்துடன் வெளிப்படுத்த வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

மேலும் புத்தகம் இல்லாமல் அனுபவங்களின் மூலமாக கற்றுக் கொள்ளவும், உடல் , மனம் மற்றும் அறிவுசார் திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். மாணவர்களுக்கு பாரம்பரிய கலைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக பாரம்பரிய கலைகளை பாதுகாக்க முடியும். இதனை தொடர்ந்து விவசாயம் சார்ந்த அறிவுடன், மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பது பற்றியும், மாடித் தோட்டங்கள் பற்றியும் ஆசிரியர்கள் கற்று கொடுக்க வேண்டும் என்றும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!