படப்பிடிப்பில் குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்குறீங்க? வெண்பா பரினா சொன்ன பதில்!
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் பரீனாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், பிரசவம் முடிந்து ஒரே மாதத்தில் நடிக்க வந்துள்ளதால் குழந்தைக்கு எவ்வாறு தாய்ப்பால் கொடுக்குறீர்கள் என ரசிகர்களின் கேள்விக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதில் அளித்து இருக்கிறார்.
நடிகை பரீனா:
விஜய் டிவியில் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் வினுஷா தேவி நடித்து வரும் நிலையில், கதைக்கு முக்கிய காரணமாக பாரதி கண்ணம்மாவை பிரித்த வில்லியாக வெண்பா இருக்கிறார். வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வந்தார். அவர் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்தது முதல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட ஒருவராக இருந்தார்.
‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியனுக்கு திருமணம்? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
காரணம் கர்ப்பகாலத்தில் அவர் நடத்திய போட்டோஷூட் தான். பல வித்தியாசமான போட்டோஷூட்களை நடத்தி சர்ச்சையில் சிக்கினார். ஒரு பக்கம் நெகட்டிவ் இருந்தாலும் மறுபக்கம் அவர் பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்னர் வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை கடந்த நவம்பர் மாதம் பிறந்தது. அவனக்கு ZYAN LARA என பெயர் வைத்து இருக்கின்றனர்.
தூக்கு போட்டுக்கொள்ளும் வெண்பா “பாரதி கண்ணம்மா” சீரியல் கிளைமேக்ஸ் – ரசிகர்கள் குழப்பம்!
அவருடைய மகன் பிறந்து ஒரே மாதத்தில் மீண்டும் அவர் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்தால் அது பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது. குழந்தை பிறந்த பின் எப்படி குடும்பம் வேலை இரண்டையும் சமாளிக்கிறீர்கள் என பலர் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்குறீர்கள் என்ற கேள்விக்கு, நான் கிடைக்கும் நேரங்களில் தாய்ப்பால் சேகரித்து வைத்து தான் கொடுக்கிறேன் என விளக்கம் அளித்து இருக்கிறார். அவர் தற்போது விஜய் டிவி மட்டுமல்லாமல் கலர்ஸ் தமிழ் அபி டெய்லர் சீரியலில் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.