ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – டிக்கெட் பணத்தினை ரிட்டர்ன் பெறும் வசதி!
இந்தியாவில் IRCTC இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டிக்கெட்டை ரத்து செய்துவிட்டால் பணம் ரிட்டன் செய்யப்படும்.
IRCTC:
இந்தியாவில் பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் பயணிகளின் வருகை குறைவால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வேத்துறை பெரும் சரிவை சந்தித்து. இந்தியாவில் ரயில் சேவை என்பது அத்தியாவசிய சேவையில் ஒன்றாக இருப்பதால் கொரோனா சற்று குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியது. கொரோனா முழுமையாக குறையாமல் உள்ளதால் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. டிக்கெட் புக்கிங் செய்த பிறகு, திடீரென்று ஏதேனும் காரணங்களுக்காக பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி டிக்கெட்டை ரத்து செய்துவிட்டால் அதற்கான முன்பதிவுக் கட்டணம் திரும்ப வழங்கப்படும். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதாவது கேன்சல் செய்யும் நேரத்தை பொருந்து உங்களுக்கு குறிப்பிட்ட அளவிலான தொகை ரிட்டன் கிடைக்கும்.
மூர்த்தியை பார்க்க வரும் கதிர், வெளியே போக சொல்லும் தனம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
அதாவது 48 மணி நேரத்திற்கு முன்னர் டிக்கெட் கேன்சல் செய்தால் AC முதல் வகுப்பு – ரூ.240 கிடைக்கும் AC 2ஆம் வகுப்பு எனில் ரூ.200 AC 3ஆம் வகுப்பு எனில் ரூ.180 மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் – ரூ.12 செகண்ட் கிளாஸ் ரூ.60 கிடைக்கும். ஒரு வேளை புக் செய்தவர்கள் அந்த ரயில் பயணிகளுக்கான சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னர் டிக்கெட்டை கேன்சல் செய்தால் பணம் எதுவும் கிடைக்காது. நீங்கள் புக் செய்து விட்டு பயணிக்கவில்லை என்றால் இணையதளத்தில் கேன்சல் என்ற ஆப்ஷனை கொடுத்து பணத்தை திரும்ப பெறலாம்.