மூர்த்தியை பார்க்க வரும் கதிர், வெளியே போக சொல்லும் தனம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நெஞ்சுவலியால் போராடும் மூர்த்தியை பார்க்க வந்த தம்பி கதிரை தனம் அண்ணி விரட்டியுள்ளார். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் சின்னா பின்னமாக போவது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரிகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
சின்னத்திரையில் அநேக ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் மக்களை என்டர்டைன் செய்யும் வண்ணம் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதிலும் அதிகளவு பார்வையாளர்களை கொண்டது எதுவென்றால் ஒரு கணம் கூட யோசிக்காமல் சொல்லலாம் அது சீரியல் என்று. அவ்வண்ணம் புது புது கதைகளுடனும், மக்களை ஈர்க்கும் நட்சத்திரங்களை கொண்டும் சீரியலை இயக்கி வருகிறார்கள். இப்படி பல புகழை கொண்ட தொடர்களுக்கு அநேக பிளாட்பார்ம்கள் உள்ளது. அந்த வரிசையில் விஜய் டிவி எப்போதும் டாப் லிஸ்டில் இருக்கும்.
TN Job “FB Group” Join Now
இப்படி விஜய் டிவிக்கே இவ்வளவு பெருமை என்றால் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்களை சொல்லவா வேண்டும் இப்படியெல்லாம் தப்பு கணக்கு போட்றாதீங்க! ஏனெனில் ஒவ்வொரு சீரியல் கதைக்களமும் மக்கள் மனதில் ஏதேனும் ஒரு விதத்தில் ஈரத்தால் மட்டுமே அந்த தொடர் ட்ரெண்டாகும். அப்படி பார்க்கையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஆரம்பத்தில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்துக்கு நடுவில் மூத்த அண்ணியும் பாச மழையை பொழிந்து அன்பான குடும்ப கதையை ரசிகர்கள் அதிகம் விரும்பினார்கள். இதுவே நாளைடைவில் போர் அடிக்கத் தொடங்கிவிட்டது.
வெண்பாவை திருமணம் செய்ய இஷ்டமில்லை என கூறிய பாரதி, சந்தோஷத்தில் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!
ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதை சூடுபிடித்து, அடுத்து என்ன நடக்கும்? என்ற ஆர்வத்துடன் நகர்கிறது. இப்படி இருக்கையில் இந்த வார ப்ரோமோ வெளியாகி இன்னும் ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெஞ்சு வலியால் துடிக்கும் மூர்த்தியை ஹாஸ்பிடலில் சேர்த்த குடும்பம் பரிசோதிக்கும் டாக்டர் பதிலுக்காக வெளியே காத்திருக்க, அந்த சமயம் கதிரும் – முல்லையும் வருகை தந்தனர். அப்போது கதிர் தனம் அண்ணியை பார்த்து என்ன மன்னிச்சிருங்க! அச்சோ! என தலையில் அடித்து அழுகிறார். உடனே தனம் அண்ணி கதிரை பார்த்து இப்போவும் ஒன்னுமில்ல, நீ முல்லைய கூட்டிட்டு வீட்டுக்கு வந்துறேன்னு ஒரு வார்த்தை அண்ணன் கிட்ட சொன்னா போதும். அவரு சரியாகிடுவாரு என சொல்கிறார். அதற்க்கு கதிர், அதான் சொல்ல வேண்டியதெல்லாம் அன்னிக்கே சொல்லிட்டேனே அண்ணி என மறுப்பு தெரிவிக்க, தனம் கோபத்தில் இவன் எதுக்கு இப்போ இங்க வந்தான்? இங்க இருந்து இவனை போக சொல்லு ஜீவா என கோபத்தில் கத்திவிடுகிறார்.